விருதுநகரில் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
Updated on
1 min read

விருதுநகரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் தலைக்கவசம் அணிவது என்பது கட்டாயமாகும். அதனால், இதை வலியுறுத்தி விருதுநகர் கச்சேரி சாலையில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.இப்பேரணியை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கச்சேரி சாலை, சிவகாசி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்றது. அதோடு, விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு காவல் துறையினர் விநியோகம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் பஜார் காவல் நிலைய போலீஸார்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com