தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம்பூரில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Updated On :28 ஜூன் 2015, 10:06 am

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு பிறகு எந்த வாகனங்களும் செல்ல முடியாதவாறு போராட்டக்காரர்கள் சாலை முழுவதும் பொருட்களையும், வாகனங்களையும் சாலையின் நடுவே போட்டு தீயிட்டு எரித்தனர்.  அதனால் ஆம்பூர் வழியாக எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக வாணியம்பாடி மார்க்கத்திலும், வேலூர் மார்க்கத்திலும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  இரவு சுமார் 2 மணியளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு பிறகு வடக்கு மண்டல ஐஜி எம்.என். மஞ்சுநாதா தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை போலீஸôர் ஆம்பூருக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.   போராட்டக்காரர்களை அவர்கள் அடித்து விரட்டினர்.  அதன் பிறகே போராட்டக்காரர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.  அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனங்களில் வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தையே அவர்கள் அடித்து நொறுக்கியதால் நோயாளிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் அச்சத்துடனேயே ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தங்களுடைய வாகனங்களில் நிறுத்திவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.