நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேர் வியாழக்கிழமை கோடியக்கரையில் கரைசேர்ந்தனர். பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகஸ்டீன்(42),முனுசாமி (39), பூரணம் (55), உ.செல்வம் (46),மாணிக்கம் (26),பாண்டி (37),செல்வம் (37)ஆகிய 7 பேரும் மீனவர்கள்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீனவர்களை புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதன் பேரில் போலிசார் விசாரணை நடத்தினர். இதனிடையே,சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் விடிவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியானது.
5 பேர் விரட்டியடிப்பு:
இந்த நிலையில்,பாம்பனில் இருந்து ஒரு படகில் 2-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டி,சேகர்,முனீஸ்,முருகானந்தம்,டோாமினிக் ஆகிய 5 மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். இவர்கள் 5 பேரிம் வியாழக்கிழமை பகல் கோடியக்கரை படகுத்துறைக்கு வந்தடைந்தனர
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


