தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை மீனவர்களால் சிறைபிடித்து விடுவிப்பு

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர்

News image
Updated On :5 மார்ச் 2015, 4:43 pm IST

நாகை மாவட்டம்,கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்களால் நடுக்கடலில் புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,இலங்கை மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேர் வியாழக்கிழமை கோடியக்கரையில் கரைசேர்ந்தனர். பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள் அகஸ்டீன்(42),முனுசாமி (39), பூரணம் (55), உ.செல்வம் (46),மாணிக்கம் (26),பாண்டி (37),செல்வம் (37)ஆகிய 7 பேரும் மீனவர்கள்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்த மீனவர்களை புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதன் பேரில் போலிசார் விசாரணை நடத்தினர். இதனிடையே,சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் விடிவிக்கப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் வெளியானது.

5 பேர் விரட்டியடிப்பு:

இந்த நிலையில்,பாம்பனில் இருந்து ஒரு படகில் 2-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டி,சேகர்,முனீஸ்,முருகானந்தம்,டோாமினிக் ஆகிய 5 மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். இவர்கள் 5 பேரிம் வியாழக்கிழமை பகல் கோடியக்கரை படகுத்துறைக்கு வந்தடைந்தனர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.