நெல்லையில் சாலைமறியல்: 64 பேர் கைது
திருநெல்வேலியில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.


திருநெல்வேலியில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இம் மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் சாலைமறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற மறியலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலர் ஆர்.சடையப்பன், மாநகரச் செயலர் செ.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...