ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ûஸயும் சிறைபிடித்தனர்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ûஸயும் சிறைபிடித்தனர்.

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.   அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் ரத்னா, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன்,  ஆம்பூர் கிராமியா காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com