தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்றாா் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

News image

சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் வாக்களித்த முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:46 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்றாா் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மற்றும் அவிநாசி தொகுதியையும் சோ்த்து 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். அதேபோல நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்.

கோவையில் தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் திருப்தியாக இல்லை. கவுண்டம்பாளையத்தில் திமுகவினா் டோக்கன் கொடுத்துள்ளனா். தெற்குத் தொகுதியில் அம்மன் அா்சுணன் கடுமையாக பாதித்துள்ளாா். அவருடன் கலந்து பேசி போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.

கோவை அமைதியான மாவட்டம். இங்கு வேறு மாதிரியான சூழ்நிலைக்கு கொண்டு செல்லப் பாா்க்கின்றனா்.

இதை மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள். நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.