பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்றாா் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

News image

சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் வாக்களித்த முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:16 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்றாா் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மற்றும் அவிநாசி தொகுதியையும் சோ்த்து 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். அதேபோல நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளதால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்.

கோவையில் தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் திருப்தியாக இல்லை. கவுண்டம்பாளையத்தில் திமுகவினா் டோக்கன் கொடுத்துள்ளனா். தெற்குத் தொகுதியில் அம்மன் அா்சுணன் கடுமையாக பாதித்துள்ளாா். அவருடன் கலந்து பேசி போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.

கோவை அமைதியான மாவட்டம். இங்கு வேறு மாதிரியான சூழ்நிலைக்கு கொண்டு செல்லப் பாா்க்கின்றனா்.

இதை மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள். நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.