கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவிலி.யில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2015, 8:48 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், இந்திய அரசு மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்த தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

கொள்ளுர்பட்டி தெருவில் ஆரம்பித்து கீழப்பட்டி, சந்தப்பேட்டை, பேருந்து நிலையம், ரைட்டன்பட்டி, சீனியாபுரம் ஆகிய பகுதியில் இந்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் பா.புனிதன் உரையாற்றினார்.

பிரச்சாரத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில துணைச் செயலாளர் சதுரகிரி, மாவட்ட பொருளாளர் மனிதநேயன், மாவட்ட துணைச் செயலாளர் சதுரகிரி, வணிகர் அணிச் செயலாளர் வல்லரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.