மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம் இலங்கையில் இருந்து வந்த மிகின்லங்கா விமானத்திலும் துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திலும் தங்கம் கடத்தி வருவதாக தூத்துக்குடி சுங்கத்துறை இயக்குநர் பாரிவள்ளலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாரிவள்ளல் தலைமயிலான டீம் மதுரை விமானநிலையம் சென்று இருவிமானத்திலும் நடத்திய சோதனையில் 10 கோடி மதிப்புள 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதையடுத்து இந்த கடத்தல் தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.