டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4 கட்சிகள் கூட்டணி இன்று அறிவிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு திங்கள்கிழமை (அக்.5) வெளியிடப்பட உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:53 am

அரவிந்தன்

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு திங்கள்கிழமை (அக்.5) வெளியிடப்பட உள்ளது.

 மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் என்ற பெயரில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன.

 காவிரி பிரச்னை, ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரங்களில் இந்தக் கட்சியினர் இணைந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 பின்னர், 5 கட்சியினரும் இணைந்து வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். ஆனால், 5 கட்சி கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என்று மனித நேய மக்கள் கட்சி திடீரென அறிவித்துவிட்டது.

 இந்த நிலையில் திருவாரூரில் திங்கள்கிழமை (அக்.5) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 4 கட்சி கூட்டணியை அறிவிக்கப் போவதாக வைகோ அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்குமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

விசிக பங்கேற்பு: இது தொடர்பாக விசிக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு கூறியது:   4 கட்சி கூட்டணி அறிவிப்பு நிச்சயம் வரும். கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார். இதில் ஊசலாட்டம் எங்களுக்கு இல்லை. இந்தக் கூட்டணி உருவாக்க ஆரம்பத்தில் இருந்து நாங்கள்தான் முயற்சித்தோம். அதனால் கூட்டணியில் தொடருவோம் என்றார்.

 திமுக, அதிமுகவுக்கு மாற்றுச் சக்தியாக இருப்போம் என்று இந்தக் கூட்டணிக் கட்சியினர் அறிவித்துச் செயல்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.