ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (77). ஓய்வு பெற்ற ஆசிரியரான

News image
Updated On :13 அக்டோபர் 2015, 12:20 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (77). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, திங்கள்கிழமை இரவு பொதிகை ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். படியில் நின்று பயணித்த அவர், வன்னியம்பட்டி அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, தவறி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.