ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (77). ஓய்வு பெற்ற ஆசிரியரான


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (77). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, திங்கள்கிழமை இரவு பொதிகை ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். படியில் நின்று பயணித்த அவர், வன்னியம்பட்டி அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, தவறி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...