விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 5:53 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேரியைச் சேர்ந்தவர் இருளாண்டி (49). இவரது ஒரு ஏக்கர் தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இதனை மயில்கள் வந்து திண்பதை அறிந்த இருளாண்டி, சோளத்தில் விஷத்தை தடவி ஆங்காங்கே போட்டு வைத்திருந்துள்ளார். இதனை சாப்பிட்ட 6 ஆண் மற்றும் 6 பெண் மயில்கள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்தது.

இது குறித்து அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த மயில்களை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தார். இவைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருளாண்டியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.