கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் ப.நிர்மலா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அந்தோனியம்மாள், வே.ரூபசௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மூடப்பட்ட துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையங்களை திறக்க வேண்டும். மாவட்ட தாய் சேய் நல அலுவலர்களை தேர்வு மூலம் செய்யாமல், மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.
கிராம செவிலியர்களுக்கு 3 கட்டங்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவில் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்துப் விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

