புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இந்திய - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியால் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அணுஉலை மின்உற்பத்தியை தொடங்கியது. அதிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது.
தற்போது புதியதாக உற்பத்தியைத் தொடங்கியுள்ள 2-ஆவது அணு உலையின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டும்போது தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இருப்பினும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் உற்பத்திó செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பாலான பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

