பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முதல் தலைமுறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பர்: தலைமை தேர்தல் அதிகாரி

புதுச்சேரியில் முதல்தலைமுறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிப்பர் என தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 மே 2016, 4:56 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்தலைமுறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிப்பர் என தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பெருமாள் கோயில் தெரு வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் டாக்டர் கந்தவேலு கூறியதாவது:

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. முதல்தலைமுறை, இளம்வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உற்சாகமாக வந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் கந்தவேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.