பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பொருளாளர் நீக்கம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பொருளாளர் ஏபி.தயாளன் கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 மே 2016, 7:32 am

சுஜித்குமார்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பொருளாளர் ஏபி.தயாளன் கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

நகர செயலாளர் டி.பன்னீர்செல்வம், தொகுதி செயலர் டி.ஜீவானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும் கட்சி முடிவுக்கும் விரோதமாக கட்சியை எதிர்த்து மாற்று கட்சிக்கு ஆதரவாக தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் பொருளாளரும், பெரியமார்க்கெட் கட்சிக் கிளையின் செயலருமான தயாளன் செயல்பட்டார்.

இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். மேலும் கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.