இந்த நிகழச்சியில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஆனால், மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த கோபத்தை மனதில் வைத்து பேசிய அமைச்சர், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எது மருத்துவர்களை தடுத்து நிறுத்தியது?, என்ற கேள்வி எழுப்பியவர் நக்சல்களுக்கு என்ன வேண்டும்?, அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால், இவர்களுக்கும் (மருத்துவர்களுக்கும்) ஜனநாயகம் தேவையில்லை. அப்படியானால், நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? நக்சல் இயக்கத்தில் இணையலாம்” என்று கோபத்தை வெளிப்படுத்தி பேசினார்.