சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம் இளைஞர் கைது

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து போலி முத்திரை பதித்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம்

News image
Updated On :23 ஜனவரி 2017, 5:01 am

ஆர். எஸ். கார்த்திகேயன்

திருச்சி: பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து போலி முத்திரை பதித்து மலேசியாவிலிருந்து வந்த ராமநாதபுரம் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் அலக்காங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (35). அவர் மலேசியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது விசா காலம் முடிவடைந்து அங்கே தங்கியிருந்ததால் அவருக்கு மீண்டும் இந்தியா வர டிக்கெட் பெறுவதில் சிரமம் இருந்தது.

இதனையடுத்து முகவர் ஒருவரின் உதவியுடன் அண்மையில் மலேசியா சென்றதுபோல போலி முத்திரை பதித்து, அதன் பின்னர் டிக்கெட் பெற்று தாயகம் திரும்பினார். ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சி வந்த அவரது ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்த போது, முறைகேடு தெரியவந்தது. இதனையடுத்து அவரை விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.