பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நிதீஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி: லாலு பிரசாத் யாதவ்

மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதீஷ் ஆட்சி அமைத்து உள்ளதை லாலு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:31 pm

DIN

பாட்னா:  மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதீஷ் ஆட்சி அமைத்து உள்ளதை லாலு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

பிகாரில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி ராஷ்டீரிய ஜனதா தளம். முறைப்படி ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்று கூறிய லாலு பிரசாத் யாதவ் தில்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் உள்ளேன்.  ஊழல் குற்றச்சாட்டுக்கள் வழியாக லாலு பிரசாத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என நிதீஷ் குமார் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளார்.

நிதீஷ் எங்களை கலந்தாலோசிக்கவில்லை. இது பா.ஜ.க.வின் சதித் திட்டமாகும் என்று கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க எங்களுக்கு எதிராக சிபிஐ-யை பயன்படுத்துகிறது என்றும் கூறினார். மேலும் நிதிஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி, பிகார் மாநில மக்கள் தேர்தலில் கொடுத்த வெற்றியானது பாரதீய ஜனதாவிற்கு எதிரானது,

மோடி மற்றும் அமித்ஷாவை வெளியேற்ற கிடைத்த வெற்றியாகும் என்று கூறிய அவர் தொடர்ந்து  ஊடகங்களை குற்றம் சாட்டிய லாலு அமித்ஷா மீடியா உரிமையாளர்களிடம் பேசுகிறார், அவர்கள் செய்தி ஆசிரியர்களிடம் பேசுகிறார், இது செய்தியாளர்கள் தவறு கிடையாது என்றார் லாலு பிரசாத் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.