புதுதில்லி: புதிய எண் தொடர் கொண்ட 500 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய நோட்டுக்களின் முன்பக்கத்தில் A உள்ளீடு எழுத்துடன் தொடர் எண்கள் இருக்கும். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பு, நாட்டின் பணபுழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்ப்ர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
இது அனைத்தும் E என்னும் உள்ளீடு எழுத்து கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முன்பு வெளியான புதிய 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே தான், தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளும் மகாத்மா காந்தியின் படத்துடன் அதே வடிவத்திலும் வண்ணத்திலும் அமைந்துள்ளது.
தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். மேலும் இதில் 2017 என ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.