ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணை தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

கர்ப்பிணிப் பெண்ணை செவிலியர்கள் தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து, பெண் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துமனை முன் நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர்.

News image
Updated On :2 மார்ச் 2017, 11:59 am

ஆர். எஸ். கார்த்திகேயன்

கர்ப்பிணிப் பெண்ணை செவிலியர்கள் தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து, பெண் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துமனை முன் நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர்.

திருச்சி பாலக்கரை ஆலம்தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் மனைவி ஆமலிராணி (26). நிறைமாத கர்ப்பிணியான அவர் புதன்கிழமை காலை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இரவு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக சோதனைக்கூடத்துக்கு சென்றார். அப்போது பணியிöலிருந்த செவிலியர்கள், புடவை உடுத்தாமல் சுடிதார் அணிந்துவந்தற்காக தரக்குறைவாக அமலிராணியை திட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அவரும் குடும்பத்தினரும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் அவரை வெளியே தள்ளுமாறு காவலர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவில்லை. இதனைக் கண்டித்து கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சேர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர். தகவலறிந்த போலீஸôர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.