இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: காவல்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 8:06 pm IST

தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது. அதிகப்பட்சமாக வேலூரில் 21 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. 

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்திருந்தது. 

பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர்.  சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் 85 ஆயிரம் பேருக்குமேல் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.