பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 10,325.15. புள்ளிகளில் உள்ளது. இதைபோல் டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், எச்.யு.எல், டிசிஎஸ், என்டிபிசி, விப்ரோ, ரிலையன்ஸ், சன் பார்மா, எச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், டாடா மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகள் 3.11 சதவீதம் அதிகரித்துள்ளன. இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.
ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறுகிய கால வட்டிவீதம், வங்கிகளில் டெபாசிட் சீட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி கொள்கை வட்டி வீதம் ஆகியவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று நாணயக் கொள்கை கமிட்டியின் உறுப்பினர்கள் இன்று முடிவு செய்தனர். இந்த முடிவு பங்குசந்தைக்கு ஊக்கம் தந்தது. அதனால் குறியீட்டெண்கள் உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









