புதுதில்லி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் ரூ.12,700 கோடி மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வங்கியில் பணிபுரிந்த அலுவலர்களின் உதவியுடன் போலி உத்தரவாதக் கடிதங்களைக் கொடுத்து அவர் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார். இந்த மோசடியை, வங்கி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கண்டறிந்து, சிபிஐயில் புகார் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, நீரவ் மோடி, அவரது மனைவி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.
இதுதொடர்பாக வைரம் மற்றும் தங்க நகை வர்த்தகர் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நஷ்டத்திற்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.
இதனிடையே இந்தப் புதிய புகார் தொடர்பாக, வங்கியின் நிர்வாக இயக்குநர் பிரமாஜி ராவ் மற்றும் இரு வங்கி மூத்த மேலாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என பலரிடமும், சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அதுபோலவே சோக்ஸி நிறுவனங்களின் 66 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ விசாரனை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்







