வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

​ உ.பி: மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

உத்தரப்பிரதேசத்தில் மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎஃப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 4:13 am

DIN

சந்த்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎஃப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்த்பூர் கிளையில் நேற்று மாலை நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனது இடுப்பைச்ச சுற்றி போலி வெடிகுண்டுகள் போன்ற பொருளைக் காட்டியிருந்தார். தான் மனித வெடிகுண்டு என்றும், தனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். வங்கிக்கு வந்த போலீஸார் குறிப்பிட்ட நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரோத்தாஷ் என்பதும், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.