மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்படுகின்றன: மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 8:47 am

ஜாடிக்கேற்ற மூடி போல மத்திய, மாநில ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சில்லத்தூர் கிராமத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது, காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை அன்னப்பன்பேட்டையில் தனது 3-ஆம் நாள் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் நடைப்பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட்
மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இரும்புதலை, திருக்கருக்காவூர், சாலியமங்கலம் உள்பட 10 கிராமங்கள் வழியாக, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், வழிநெடுகிலும், விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். 

பிற்பகலில் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின், ஜாடிக்கேற்ற மூடி போல செயல்பட்டு வரும் மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மெலட்டூர், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அம்மாபேட்டை, அமராவதி, வெட்டாற்றுபாலம் வழியாக நீடாமங்கலத்தை சென்றடைகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.