பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்பு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையின் காரணமாக கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. உபரிநீா் வரத்து காரணமாக கடந்த 23 ந்தேதி மேட்டூா் அணை நிரம்பியது. 

இதனையடுத்து மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. கடந்த 2ஆம் தேதி அணையின் நீா் மட்டம் சரிந்த காரணத்தால் உபரிநீா் போக்கியில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் பாசனப்பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரித்ததால் புதன்கிழமை காலைவரை நொடிக்கு 17,500 கனஅடிவீதம திறக்கப்பட்டு வந்த தண்ணீா் திறப்பு இன்று காலை நொடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் பகல் 12 மணிக்கு நொடிக்கு 25 ஆயிரம் கனஅடியாகவும் மாலை 3 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. 

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,311 கனஅடியாக இருந்தது. அணையின் நீா் மட்டம் 117.50 அடியாகவும், நீா் இருப்பு 89.53 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.