டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு புறக்கணித்து ஏன்?: ப. சிதம்பரம் கேள்வி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு தவிர்த்து ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:35 pm

PTI


கொல்கத்தா: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு தவிர்த்து ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவானது அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவும், விலை பேச்சுவார்த்தை குழுவும் ஏன் இருளில் மறைக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் கொள்முதல் விலைக்கும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கொள்முதல் விலைக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடி அளவில் வாங்கியது. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.1,670 கோடி அளவிற்கு விலை நிர்ணயித்து வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை சரியெனில், விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம், இதுகுறித்து யாராவது விளக்குவார்களா? என்று கேட்டுள்ளார். 

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.