மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா திரும்பினார்

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.
மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா திரும்பினார்
Updated on
1 min read

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார் மோடி. பாலஸ்தீனம் செல்லும் வழியில் அம்மான் நகரில் இறங்கி ஜோர்தான் மன்னரையும் பல நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
  
பின்னர், அபுதாபியில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமும் கொள்கையுமே துபாயின் வெற்றிக்கு காரணம். தொழில்நுட்பம் தொடர்மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றார். 

மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று தில்லி வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அதிகாரிகள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com