பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா திரும்பினார்

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 2:10 pm

DIN

மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார் மோடி. பாலஸ்தீனம் செல்லும் வழியில் அம்மான் நகரில் இறங்கி ஜோர்தான் மன்னரையும் பல நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
  
பின்னர், அபுதாபியில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமும் கொள்கையுமே துபாயின் வெற்றிக்கு காரணம். தொழில்நுட்பம் தொடர்மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றார். 

மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று தில்லி வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அதிகாரிகள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.