எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது: அமித்ஷா பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்ய சாணக்கியரின் கொள்கைகளைப் போலவே இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 5:43 am

ANI

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்ய சாணக்கியரின் கொள்கைகளைப் போலவே இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ரம்பாவ் மல்ஜியின் 75வது நினைவு தின நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.

மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-இல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு உரை நிகழ்த்தினார். அவருக்கு பிறகு வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.