கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

News image
Updated On :9 மார்ச் 2018, 9:18 am

DIN

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. 
இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. 

பத்திரிகையாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரண்டு பேர் சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக டோக்கன் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வேலையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென், குழுவுக்கு நெருக்கமான ஊடகங்களுக்கு வேலை செய்பவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர்.

இஸ்தான்புல் நீதிமன்றத்தில் இன்று தண்டனை வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்ட 25 பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.