அஜ்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் பால கங்காதர திலகர் பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ள தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமானவராக பால கங்காதர திலகர் திகழ்கிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மேல்நிலை கல்வி எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிக்கல்வி பாடபுத்தகத்தில், "திலகர், தேசிய இயக்கத்திற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்" என புத்தகத்தின் 22 பாடத்தில், 267வது பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது திலகர் விபரம் என்ற பிரிவில் ’18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் போது தேசிய இயக்கத்தின் சம்பவங்கள்’ என்ற துணை தலைப்பின் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கெஞ்சுவதன் மூலம் எங்களால் எதையும் சாதிக்க முடியாது என்று திலகர் கூறினார். சிவாஜி, கணபதி திருவிழாக்கள் மூலம் திலகம் நாட்டு மக்கள் மத்தியில் தேசியவாதத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அவர் மக்களிடையே சுதந்திரம் எனும் மந்திரத்தை ஊக்குவித்தார். இதன் காரணமாக அவர் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் ஒரு முள்ளாக தோன்றினார். அதனால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்பட்டார் என்று அந்த புத்தகத்தில் மேலும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் ராஜஸ்தான் மொழியில் இருந்து ஆங்கிலத்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரைவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டூடன்ட் அட்வையர் பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுள்ளது.
திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குநர் கைலாஷ் சர்மா கூறுகையில், திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்றாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும் என்றார்.
இந்நிலையில், ‘திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்று ஆய்வாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும்’ என்று திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குநர் கைலாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


