திருவண்ணாமலை: பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாரணைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க பாதிக்கப்பட்ட மாணவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவிடம் கடந்த திங்கள்கிழமை மாணவி நேரில் ஆஜராகி, தன்னிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் அளித்தார்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (செப் 3) நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என வேளாண் பல்கலை. விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

