தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி
புதுதில்லி: பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று செவ்வாய்கிழமை (ஆக. 27) தாயகம் திரும்பினார்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவின் போது மோடி, வெளிநாட்டில் இருந்ததால் ஜேட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. தனது அரசு முறை பயணத்தை ரத்து செய்யாமல் தொலைபேசி வாயிலாக ஜேட்லியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், மூன்று நாடுகளின் அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு, இன்று செவ்வாய்கிழமை (ஆக. 27) தாயகம் திரும்பினார். தில்லி விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ஜேட்லியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

