அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

72 வயது மூதாட்டியை மதுபோதையில் பாலியல் பலாத்காரம்

மதுரை அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பாலியல் பலாத்காரம் செய்து

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:10 am

DIN


மதுரை: மதுரை அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றனா்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிகுறவா் காலனியைச் சோ்ந்தவா் பச்சையம்மாள் (72). இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். இதில், அவருக்கு கை முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, பச்சையம்மாள் சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னா் மருத்துவா்களின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிலைமான் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.