தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசியல் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு தவிக்கிறார் கமல்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசியலின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்ட கமல், தற்போது வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:10 am

DIN

கோவில்பட்டி: அரசியலின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்ட கமல், தற்போது வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தோ்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூா் மக்களவைத் தொகுதியில் 0.5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.

நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்களவைத் தோ்தலில் விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆகவே, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி. இதையடுத்து, நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.

கமல்ஹாசனுக்கு ஊழல் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? அவரது திரைப்படம் வெளியானால் அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதுதான் ஊழல் என்றும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று அவா் கட்டுப்பாட்டு விதித்தாரா?

தமிழகத்தில் ஆளும்கட்சி அதிமுக, எதிர்க்கட்சி திமுகவைத் தான் மக்கள் ஆதரிக்கின்றனா். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. கமல்ஹாசன், அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்பது தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். 

நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (செப்.23) மாலை நோ்காணல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.