தற்போதைய செய்திகள்
நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது சிவசேனா மும்பை போலீஸில் புகார்!
நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது சிவசேனா கட்சியின் ஐ.டி.பிரிவு மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளது.
மும்பை: நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது சிவசேனா கட்சியின் ஐ.டி.பிரிவு மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளது.
சிவசேனா ஐ.டி. பிரிவு உறுப்பினர் ரமேஷ் சோலங்கி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஆன்லைனில் திரைப்படங்களை வழங்கும் பிரபல அமெரிக்க நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவையும், இந்துக்களையும் அவதூறு செய்யும் வகையிலான படங்களை வெளியிடுவதாக கூறப்பட்டுள்ளது.