தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மன்னார் வளைகுடா கடல்  பகுதியில் சூறைக் காற்று : மீன் பிடிக்க செல்ல தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 

News image
கடல் சீற்றத்துடன் துறைமுகத்தில் மோதுவதால் 20 அடி உயரத்திற்கு சீறிபாயும் கடல் அலை
Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:53 am

DIN

ராமேசுவரம், ஆக.04: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுருத்தி உள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடலோர பகுதியான தனுஸ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசி வருகிறது. மேலும் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் செவ்வாய்கிழமை தடை விதித்துள்ளனர்.

இதனால் தனுஸ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, அந்தந்த மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Story image

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் விடுகளில் முடங்கி உள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் சூறை காற்று வீசுவதால் முகுந்தராயர்சத்திரம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் கடல் அலை மோதி 20 அடி உயரத்தில் வீசி வருகிறது. அந்த பகுதியில் மீனவர்கள் செல்லக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.