இலங்கையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் இரண்டு முறை தள்ளிப் போன நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நுவாரா-எலியா நகரத்தில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து வாக்களிக்க வரும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குசாவடிகளும் சுகாதார பணியாளர்கள் கொண்டு முறையாக சுத்தம் செய்யப்படுகிறது என கூறினார்.