

இலங்கையில் கரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இது குறித்து கல்வித்துறை செயலாளர் சித்ரநந்தா கூறுகையில்,
இலங்கையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது.
தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகள் அனைத்து ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு மார்ச் மாதத்திற்கு முன்பு செயல்பட்டது போல் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.
200 க்கும் அதிகமாக மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் வகுப்பு வாரியாக பிரித்து நாள்தோறும் 200 மாணவர்களைக் கொண்டு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.