ஆந்திரத்தில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விஜயவாடாவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தடுப்பணை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அணையில் இருந்து 70 கதவுகள் திறக்கப்பட்டு நீர் முழுவதும் கிருஷ்ணா நதியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிருஷ்ணா நதியில் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவிலான தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
இதனால் கிருஷ்ணா நதியையொட்டியுள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய விஜயவாடா ஆட்சியர், அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழிவினரும், மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

