ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு: விஜயவாடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திரத்தில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விஜயவாடாவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 10:55 am

DIN

ஆந்திரத்தில் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விஜயவாடாவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திரத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தடுப்பணை கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அணையில் இருந்து 70 கதவுகள் திறக்கப்பட்டு நீர் முழுவதும் கிருஷ்ணா நதியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிருஷ்ணா நதியில் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவிலான தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் கிருஷ்ணா நதியையொட்டியுள்ள பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய விஜயவாடா ஆட்சியர், அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழிவினரும், மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.