நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனிடையே நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெதர்லாந்து இந்திய தூதரான வேணு ராஜமோனி நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்திய மக்கள் பல்வேறு ஆவணங்களை விரைவில் தூதரகத்திற்கு அனுப்ப முடியும், தூதரகத்தில் இருந்து தபால் மூலமாக ஆவணங்களை பெறவும் இயலும். இதன் மூலம் விசாவிற்காக பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்க வேண்டிய தேவை குறையும். மேலும், தூதரகம் விரைவில் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
நெதர்லாந்தில் சுமார் 40,000 பேர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இதனை இந்தியத்தூதர் வேணு ராஜமோனி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்!
தவெக அரசை 144 பேர் ஆதரித்தது எப்படி? எதிர்த்தவர்கள் யார்?

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை செய்திகள் - நேரலை
விடியோக்கள்

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு

