தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கமுதியில் ரூ. 1.75 கோடி வெடிபொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு: முதற்கட்டமாக 500 கிலோ அழிப்பு

ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள 2500 கிலோ வெடி பொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் முதல் கட்டமாக 500 கிலோ அழிக்கப்பட்டது.

News image
கமுதியில் ரூ. 1.75 கோடி வெடிபொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated On :21 ஆகஸ்ட் 2020, 10:51 am

DIN

கமுதி தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் வெடி பொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் முதல் கட்டமாக 500 கிலோ அழிக்கப்பட்டது.

ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக கடந்த 2007-ல், இலங்கைக்கு கடத்த முயன்ற 2500 கிலோ எடையுள்ள ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொட்டாசியம் நைட்ரேட் எனப்படும் வெடி பொருளை ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Story image

இந்த வழக்கு பரமக்குடி நீதிமன்றத்தில் விசாரனை முடிந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கும் 2020 மார்சில், முடிவடைந்தது.

இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கொரானா பிரச்னையில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் வெடி பொருளை அழிக்க நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறையினர் காத்திருந்த நிலையில் வழக்கு முடிவடைந்ததால், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விரைவில் வெடி பொருட்கள் அழிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் ஆய்வாளர் ஜெயராமன், சார்பு ஆய்வாளர் ஜெயராமடு தலைமையில், 7 பேர் கொண்ட குழு முதல்கட்டமாக 500 கிலோ வெடி மருந்து பொருட்களை, கமுதி அருகே காட்டு பகுதியில் தீ வைத்து  பாதுகாப்பாக அழித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.