வியட்நாமிற்கு இந்தியா வெள்ள நிவாரணம்

வியட்நாமில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் வியட்நாமிற்கு சென்றடைந்தது.
நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கப்பல்
நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கப்பல்
Updated on
1 min read

வியட்நாமில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் வியட்நாமிற்கு சென்றடைந்தது.

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தரப்பில் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்

இதுகுறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

“வியட்நாமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கில்தான் கப்பல் டிசம்பர் 4ஆம் தேதி ஹோ சி மின் நகருக்கு வந்து சேர்ந்தது.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com