ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கேரள அரசிற்கு மத்திய அமைச்சர் அறிவுரை

கேரள அரசு மாநிலத்தில் பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், கேரள பாஜக தலைவருமான வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய அமைச்சர் வி.முரளீதரன்
Updated On :25 டிசம்பர் 2020, 10:49 am

ANI

கேரள அரசு மாநிலத்தில் பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், கேரள பாஜக தலைவருமான வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசு சார்பில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது.

ஆனால், கேரள அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனிடையே கேரள அரசுத் தரப்பில் டிசம்பர் 31ஆம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வி.முரளீதரன் கூறியதாவது,

கேரளத்தில், கரோனாவால் உயிரிழப்பவர்களின் சராசரி தேசிய அளவைவிட அதிகமாக உள்ளது. அதனால் மாநிலத்திற்கு தொடர்பு இல்லாத பிரச்னைகள் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.