கேரள அரசிற்கு மத்திய அமைச்சர் அறிவுரை
கேரள அரசு மாநிலத்தில் பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், கேரள பாஜக தலைவருமான வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.


கேரள அரசு மாநிலத்தில் பிரச்னைகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், கேரள பாஜக தலைவருமான வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு சார்பில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது.
ஆனால், கேரள அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனிடையே கேரள அரசுத் தரப்பில் டிசம்பர் 31ஆம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வி.முரளீதரன் கூறியதாவது,
கேரளத்தில், கரோனாவால் உயிரிழப்பவர்களின் சராசரி தேசிய அளவைவிட அதிகமாக உள்ளது. அதனால் மாநிலத்திற்கு தொடர்பு இல்லாத பிரச்னைகள் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...