யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னையில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சார்ந்த 4 அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் தனது இல்லத்தின் முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.

News image
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
Updated On :27 ஜூலை 2020, 7:11 am

DIN

மத்திய அரசின் வேளாண் சார்ந்த 4 அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் தனது இல்லத்தின் முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.

மத்திய அரசின் அவசர சட்டம் வேளாண்மையை அழித்து விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேட்டியளித்த வைகோ, “இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். மக்களின் கருத்துக்களை கேட்காமலேயே, அதிகாரப் போக்குடன் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.” என அவர் சாடினார்.

மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள சட்டங்களால்,  விவசாயிகள் பாதிக்கப்படுவர். இந்த அவசர சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடு எனக் குறிப்பிட்டார்.

மத்திய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை குறித்து குறிப்பிட்டுப் பேசிய வைகோ, “எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுச்சூழல் ஆய்வை ரத்து செய்யக்கூடாது.” என்று  தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நல்ல தீர்ப்பு என்றும் மிகச்சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.