பொன்னமராவதி: விவசாய சங்கங்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
பொன்னமராவதியில் விவசாயத்தை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.


பொன்னமராவதியில் விவசாயத்தை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம் 2020, அத்தியாவசியபொருள்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020 உள்ளிட்ட மூன்று அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொன்னமராவதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.பிரதாப்சிங் தலைமைவகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி வி.பி.நாகலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலர் ஏனாதி ஏஎல்.ராசு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் வேளாண்மையை பாதிக்கும் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி முழக்கமிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...