சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களுக்கு கரோனா
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் ஒரே காவல் நிலையத்தை சார்ந்த ஐந்து காவலர்களை கைது செய்தனர். இவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தனர். பின்பு பதினைந்து நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடந்த வாரத்தில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...