வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,26,770-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர்

News image
Updated On :5 ஜூன் 2020, 5:23 am

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,26,770-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகமாகும்.

கரோனாவால் மேலும் 273 போ் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,348-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,10,960 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,09,462 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைவதற்கான வாய்ப்புகள் 48.27 சதவீதம்.

கரோனா தொற்றால் அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 77,793 போ் பாதிக்கப்பட்டுள்ளனா், 41,402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 33,681 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,710 போ் பலியாகியுள்ளனர். அதைத் தொடா்ந்து தமிழகத்தில் 27,256 பேரும், தில்லியில் 25,004 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உலகளவில் கரோனாவுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் இந்தியா 12- வது இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.