பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நாமக்கல் அருகே குடிபோதையில் சகோதரரை குத்திக் கொன்ற தம்பி கைது

நாமக்கல் அருகே குடிபோதையில் சொந்த சகோதரரை குத்திக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :19 ஜூன் 2020, 5:25 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே குடிபோதையில் சொந்த சகோதரரை குத்திக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் அருகே வளையப்பட்டி மாவிலி தெருவைச் சேர்ந்தவர் சோழராஜா(70). இவரது தம்பி நாகேஷ் (65). மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத இருவரும் ஒரே வீட்டில் தங்கி ஊர் ஊராக சென்று பழம் வியாபாரம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வந்த  நாகேஷ் பழம் மொத்தமாக வாங்கியது தொடர்பாக சகோதரரான சோழராஜாவிடம் கேட்டதுடன் அதற்குரிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாகேஷ் கத்தியால் சோழராஜாவை குத்தினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சோழராஜா உயிரிழந்தார். 

இதுகுறித்து மோகனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி நாகேஷை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.